தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

9.9.17

செப்டம்பர் 11 முதல் மீண்டும் வேலைநிறுத்தம்: ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு

செப்டம்பர் 11-ம் தேதி முதல் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது, 7 வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் போராட்டம் நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்தநிலையில், போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு இன்று கூடி ஆலோசனை நடத்தியது. ஆலோசனைக்குப் பின்னர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர், செப்டம்பர் 11-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

செப்டம்பர் 11-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், செப்டம்பர் 12-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் எதிரே மறியல் போராட்டம் நடைபெறும் என்றும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் எதிரே செப்டம்பர் 13-ம் தேதி காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்