தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

18.12.14

பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்து அனுப்ப உத்தரவு

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - 01.01.2015 அன்றைய நிலவரப்படி இடைநிலை ஆசிரியர்கள் (அனைத்து பாடங்கள்), உடற்கல்வி, சிறப்பாசிரியர்களிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக (அனைத்து பாடங்கள்) பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்து அனுப்ப இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.


DSE - SGT TO BT PANEL DETAILS CALLED REG PROC.pdf

மாணவர்கள் நலன் கருதி இந்த கல்வி ஆண்டில் இனிமேல் ஆசிரியர் இடமாற்றம் இல்லை


மாணவர்கள் நலன் கருதி இந்த கல்வி ஆண்டில் இனிமேல் ஆசிரியர் இடமாற்றம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாணவர்கள் நலன் கருதி இந்த கல்வி ஆண்டு வரை இனிமேல் ஆசிரியர்கள் மாறுதல் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணை பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கும், தொடக்க கல்வி இயக்குனரகத்திற்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாணை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு அனுப்பப்பட உள்ளன

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில்(CPS) இணைய கால அவகாசம் நீட்டிப்பு


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில்(CPS) இணைய கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:

அரசுத் துறைகளிலும், ஆசிரியர் பணியிலும் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்குப் பிறகு சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் சேரும்போது முகப்பு (இண்டக்ஸ்) எண் வழங்கப்படும்.

தமிழ்நாடு தரவு மையத்தின் (டேட்டா செண்டர்) இணையதளத்தில் இருந்து இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த எண்ணை ஊழியர்கள் பெற்றுள்ளார்களா என்பதை சம்பளம் வழங்கும் அலுவலர்கள் உறுதி செய்து கொள்வது அவசியம். உறுதி செய்யப்பட்டதை, கணக்குத் துறை மற்றும் கருவூல அதிகாரியிடம் இதை தெரிவிக்க வேண்டும்.

முகப்பு எண் வழங்கப்படாமல் இருந்தாலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். என்றாலும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் முகப்பு எண் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பதற்கான பிப்ரவரி மாதம் வரையில் காலக்கெடு தற்போது நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.

முகப்பு எண் பெறாத மற்றும் அதற்கு விண்ணப்பிக்காதவர்களின் சம்பள பட்டியல் பிப்ரவரி மாதம் வரை ஏற்றுக் கொள்ளப்படும். அதன் பிறகு ஏற்றுக் கொள்ளப்படாது. எனவே, பிப்ரவரிக்குள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர விண்ணப்பித்து அதற்கான முகப்பு எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசாணை எண்: 837 நாள்: 24-11-2014
.

13.10.14

சான்றொப்பம் பெறத் தேவை இல்லை - தமிழக அரசு உத்தரவு

null

முறையற்ற ஆசிரியர் பணியிட நிர்ணய விவகாரம்: குமரியில் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்

குமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு அமைப்பாளர் ஜெரோம், இணை அமைப்பாளர் வேலவன், நிர்வாகிகள் ஜாண்இக்னேஷியஸ், மரியமிக்கேல், ஹெர்பர்ட், ராஜாசிங், பரமேஸ்வரன், இருதயதாசன், சேவியர், ஜாண் பெனடி ஆகியோர் கூறியதாவது:

குமரி மாவட்ட கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள 2014&15 கல்வியாண்டிற்கான பணியாளர் நிர்ணயம் கடந்த பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த அனைத்து நடைமுறைகளையும், மரபுகளையும் கணக்கில் கொள்ளாமல் வெளிவந்துள்ளது. இது பொது பள்ளிகளை இழுத்து மூடும் மறைமுக திட்டம் என்றே தோன்றுகிறது.

கல்வித்துறை அலுவலர்கள் உரிய காலத்தில் செய்ய வேண்டிய பணியிட நிர்ணய வேலையில் வருவாய்துறை அதிகாரிகள் அத்துமீறி நுழைந்துள்ள நிலை உருவானது ஏன்?. இது குறித்து தமிழக அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1010 பணியிடங்கள் உபரி என அறிவிப்பு வெளியிட்டுள்ள செயலை ஆசிரியர் இயக்க கூட்டமைப்பு கண்டிக்கிறது.

தலைமை ஆசிரியர் பணியிடம் பள்ளியை நிர் வகிக்க ஏற்படுத்தப்பட பணியிடம். இப்பணி யிடத்தை ஒரு ஆசிரியர் பணியிடமாக கருதக்கூடாது. உதவி தலைமை ஆசிரியர்களுக்கு 14 பாட வேளைகள் ஒதுக்கப்பட்ட சூழல் மாறி முழு பாடவேளை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனாலும் ஆசிரியர்கள் உபரியாக்கப்பட்டுள்ளனர்.

வேறு எந்த மாவட்டத்திலும் நடை பெறாத அவலங்கள் குமரி மாவட்ட கல்வித்துறையில் அரங்கேறி வருகிறது. இனியும் இதனை பொறுத்துக் கொள்ள இயலாது.

இதுகுறித்து கடந்த 10ம் தேதி இடை நிலைக்கல்வி இணை இயக்குநரை சந்தித்து முறையிட்டுள்ளோம். கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாக 13ம் தேதி (இன்று) முதல் 24ம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தொடர் உண்ணாவிரத போராட்டமும், 24ம் தேதி முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டமும் நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
.

10.10.14

இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: தெரசாவுக்குப்பின் ஒரு கவுரவம்

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் பெண் மலாலாவுக்கு வழங்கப்படுகிறது.

2014ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் பெண் மலாலா ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ளனர். அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதில் அன்னை தெரசாவுக்கு பின்னர் அமைதி விருதை இந்தியர் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மட்டுமல்லாமல், உலகளவில் குழந்தை தொழிலாளர்களே இருக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் அதனை ஒழிக்க பாடுபட்டு வரும் கைலாஷ் சத்யார்த்தி, 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ளார். இதன் மூலம் நோபல் பரிசு பெறும் 8வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அன்னை தெரசாவுக்குப்பின், அமைதிக்கான நோபல் பரிசு பெறும் இந்தியர் கைலாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மத்திய பிரதேசத்தின் விதிஷாவில் 1954 ஜன., 11ம் தேதி பிறந்தார். 1990ல் "பச்பன் பச்சாவோ ஆந்தோலன்' என்ற அமைப்பை நிறுவிய இவர், நாட்டில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பாடுபட்டு வருகிறார். இதன் மூலம் இந்தியாவில் 80 ஆயிரம் குழந்தை தொழிலாளர்களை மீட்டு, கல்வி கற்க உதவியுள்ளார்.

இவர் இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் பல்வேறு நாடுகளில் குழந்தைகள் சந்திக்கும் மனித உரிமை மீறல்கள் பிரச்னைகள் பற்றி நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நடவடிக்கை தவிர, வறுமை, வேலைவாய்ப்பின்மை, எழுத்தறிவின்மை, மக்கள் தொகை பெருக்கம் போன்ற சமூக பிரச்னைக்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். யுனஸ்கோ அமைப்பில் உறுப்பினராகவும் இருக்கிறார். இதன் மூலம் அனைத்து குழந்தைகளுக்கு கல்வி வழங்க வேண்டும் என வலியுறுத்து வருகிறார். தற்போது இவர் டில்லியில் வசித்து வருகிறார். 

அகவிலைப்படி உயர்வு அரசாணை

null

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

19.9.14

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்விற்கான ஆணை வெளியீடு

null

18.9.14

வருமான வரி பிடித்தம் - அபராதத்தை தவிர்க்க...

null

15.7.14

இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தி பள்ளிக் கல்வி மானிய கோரிக்கையில் அறிவித்திடுக - தஇஆச தீர்மானம்

மேல் நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்திட வேண்டும் என்றும், இதற்கான அறி விப்பை பள்ளிக் கல்வி மானிய கோரிக்கையின் போது வெளியிட வேண்டும் என்றும் தமிழ் நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி பிஷப் ஹீபர் பள்ளியில் வைத்து 12-07-2014 அன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் கயத்தாறு தலைமை வகித்தார். தலைமை நிலையச் செயலாளர் வெங்கடேசன், அமைப்புச் செயலாளர் அருணகிரியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைப் பொதுச் செயலாளர் எட்வின் பிரகாஷ் இதழ் அறிக்கையையும், மாநில பொருளாளர் மதலைமுத்து வரவு& செலவு அறிக்கையையும், பொதுச் செயலாளர் இசக்கியப்பன் வேலை  அறிக்கையையும் வாசித்தனர்.

தீர்மானங்கள்
:

1. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும், நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 25 ஆயிரம் இடை நிலை ஆசிரியர்களை சட்டப்பேரவையில் நடை பெறும் பள்ளிக் கல்வி மானிய கோரிக்கையின் போது பட்டதாரி ஆசிரியராக அறிவித்து ஆணை வெளியிட வேண்டும்.

2. இடைநிலை ஆசிரியர்களின் சாதாரண நிலை ஊதியத்தை ரூ.5,200 - ரூ.20,200, தர ஊதியம் ரூ.2,800 என்பதை மாற்றி ரூ.9,300 - ரூ.34,800, தர ஊதியம் ரூ.4,200 என மாற்றி அமைக்க வேண்டும்.

3. பதவி உயர்வு வாய்ப்பே இல்லாத நிலையில், உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களின் தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதிய விகி தத்தை தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் நிலை யில் தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியமாக வழங்க வேண்டும்.

4. கோவை, சென்னை பள்ளிக்கல்வித் துறை தணிக்கை அதிகாரிகள் ரூ.750, ரூ.500 அடிப்படையில் பெற்றது தவறு என தணிக்கை தடை செய்தததை ரத்து செய்து, 2006ம் ஆண்டுக்கு முன்னர் தேர்வுநிலை, சிறப்புநிலை பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு (தர ஊதியம் ரூ.4300, ரூ. 4500 ) ரூ.500 சிறப்பு படியும், 2006ம் ஆண்டுக்கு பிறகு பெற்றதால் ரூ.750 தனி ஊதியம் வழங்க வழிவகைச் செய்யும் அரசாணையை (எண் 23 நாள் 12.1.2011) பள்ளிக் கல்வித் துறை அமல்படுத்தி பாதிப்பை சரிசெய்திட வேண்டும்.

5. அனைத்து ஆசிரியர், ஆசிரியர் அல்லாதார் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.

6. பணிநிரவலில் இடைநிலை ஆசிரியர்களுக்கு முழு விலக்கும் அளித்திட வேண் டும்.

7. இடைநிலை ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு கலந்தாய்வு நடத்த வேண்டும்

என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, திருச்சி மாவட்டச் செயலாளர் தியாகராஜன் வரவேற்றார். முடிவில் மாநில இணைச் செயலாளர் ஸ்டீபன் நன்றி கூறினார்.
.

6.7.14

மாநில செயற்குழு கூட்டம் - அழைப்பிதழ்

இடம்
மரக்கடை சையது முர்துஷா அரசு மேல்நிலைப்பள்ளி, திருச்சி. 


நாள்
12.07.2014, சனி 


நேரம்
காலை 10.00 மணி
       

பொருள்:

1. வழக்கு விபரங்கள்
           
2. 2014-15 உறுப்பினர் சந்தா, இதழ் புரவலர் சந்தா, ஆண்டு சந்தா.
          
3. வழக்கு நிதி, வளர்ச்சி நிதி.
           
4. பதவி உயர்வு, இட மாறுதல் பணி நிரவல் - தொடர்பானவை
           
5. கோவை - தணிக்கை தடை (ரூ. 500, ரூ. 750க்கு)
           
6. செயற்குழு உறுப்பினர் கொணர்வன
           
7. இதர.

தலைமை
திரு. சு. கயத்தாறு
மாநிலத் தலைவர்


முன்னிலை
திரு. அ. அருணகிரியார், மாநில அமைப்புச் செயலாளர்.
திருமதி அ. ஜெயராணி, மாநிலச் செயலாளர்.
திரு. ச. வெங்கடேசன், மாநிலத் தலைமையிடச் செயலாளர்.


வரவேற்புரை
திரு. கு. தியாகராஜன், மாவட்டச் செயலாளர், திருச்சி.


வேலை அறிக்கை 
திரு. க. இசக்கியப்பன்
பொதுச் செயலாளர்


இதழ் அறிக்கை 
திரு. ம. எட்வின் பிரகாஷ்
மாநில துணைப் பொதுச் செயலாளர்.


வரவு-செலவு அறிக்கை
 திரு. ஆ. மதலைமுத்து 
மாநிலப் பொருளாளர்


நன்றியுரை
திரு. செ. அப்பாத்துரை, மாநில இணைச்செயலாளர்.

            
மாநில இணைப் பொறுப்பாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கிட அன்புடன் அழைக்கின்றோம்.
                                                
அன்புடன்,                                       
க.  இசக்கியப்பன்,
பொதுச் செயலாளர்.

தொடர்புக்கு:
  1. திரு. கு. தியாகராஜன், கைப்பேசி எண்: 9976006262
  2. திரு. அ. அருணகிரியார், கைப்பேசி எண்: 9486493905
.

27.6.14

இடைநிலை ஆசிரியர் காலி பணியிடம் - கன்னியாகுமரி மாவட்டம்

1. அ உ ப அனந்தபுரம்

2. அ மே நி ப ஆரல்வாய்மொழி

3. அ உ ப இலந்தையடிவிளை

4. அ உ ப இரவிபுதூர்

5. அ உ ப கோட்டையடி

6.  அ உ ப கோட்டையடி

7. அ உ ப குலசேகரபுரம்

8. அ உ ப மேலச் சூரங்குடி

9. அ உ ப மங்கலம்

10. அ உ ப பேயன்குழி

11. அ உ ப பொன்மனை

12. அ உ ப புதூர்

13. அ மே நி ப தாழக்குடி

14. அ மே நி ப திட்டுவிளை

15. அ மே நி ப தோவாளை

16. அ உ ப வாரியூர்

25.6.14

பதவி உயர்வு: இறுதி முன்னுரிமைப் பட்டியல் - கணிதம்

Sgt to Bt Maths Panel Final as on 01-01-2014

பதவி உயர்வு: இறுதி முன்னுரிமைப் பட்டியல் - ஆங்கிலம்

SGT to BT-English Final Panel as on 01-01-2014

பதவி உயர்வு: இறுதி முன்னுரிமைப் பட்டியல் - தமிழ்

13.4.14

பணிநிறைவு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா

கன்னியாகுமரி மாவட்டம், அரசு, அரசு உதவி பெறும் உயர், மேல் நிலைப் பள்ளிகளில் பணியாற்றி பணிநிறைவு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு  பாராட்டு விழா நாளை 14-04-2014 அன்று மாலை 3மணிக்கு நடைபெறுகிறது.
  
நாள்:
 14-04-2014, திங்கள், மதியம் 3.00 மணி

இடம்:
டீம் இல்லம், TNPGTA அலுவலகம், K. P. ரோடு, செட்டிக்குளம் சந்திப்பு, நாகர்கோவில்.  

தலைமை
திரு. R. ஹெர்பர்ட் ராஜா சிங், மாவட்டத் தலைவர்.

முன்னிலை:  
கல்வி மாவட்டத் தலைவர்கள்

வரவேற்புரை
திரு. P. D. திவாகரன் பிள்ளை, மாவ. அமை. செயலாளர்.

வாழ்த்துரை
திரு. M. எட்வின் பிரகாஷ், மாநில துணைப் பொதுச் செயலாளர். 
கல்வி மாவட்டச் செயலாளர்கள் 
தோழமைச் சங்க நிர்வாகிகள்

சிறப்புரை
திரு. க. இசக்கியப்பன், பொதுச் செயலாளர்.

ஏற்புரை
பணி நிறைவு பெறும் இடைநிலை ஆசிரியர்கள்

நன்றியுரை
திரு. T. செல்வராஜ், மாவட்டப் பொருளாளர்.


விழாவில் பணிநிறைவு பெறும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களும், சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறோம்.

 இவண்,

த.இ.ஆ.ச.,
கன்னியாகுமரி மாவட்டம்
.

3.4.14

ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கு10 சதவீத அகவிலைப்படி உயர்வை அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையிபல், 1.1.2014 முதல் மத்திய அரசு அலுவலர்களுக்கான அகவிலைப் படியை அவர்களது அடிப்படை மற்றும் தர ஊதியத்தில் 10 விழுக்காடு உயர்த்தி வழங்க மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.

இதன் அடிப்படையில், 1.1.2014 முதல் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை அவர்களது அடிப்படை மற்றும் தர ஊதியத்தில்10 விழுக்காடு உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசாணை எண்: 96 நாள்: 03-04-2014
.

13.3.14

மூன்றாம் பருவ தொகுத்தறித் தேர்வு கால அட்டவணை


3rd Term Summative Assessment Examination

Standards VI to VIII   (10 a.m to 12.30 p.m)

DATE
DAY
SUBJECTS
3.04.2014
Thursday
Language
8.04.2014
Tuesday
English
10.04.2014
Thursday
Mathematics
11.04.2014
Friday
E.V.S/P.E.T
15.04.2014
Tuesday
Science
16.04.2014
Wednesday
Social Science


Standards IX   (2.00 p.m to 4.30 p.m)

DATE
DAY
SUBJECTS
3.04.2014
Thursday
Language Paper I
8.04.2014
Tuesday
Language Paper II
9.04.2014
Wednesday
English Paper I
10.04.2014
Thursday
English Paper II
11.04.2014
Friday
Mathematics
12.04.2014
Saturday
E.V.S/P.E.T
15.04.2014
Tuesday
Science
16.04.2014
Wednesday
Social Science

Practical Examination for Standard IX  should be conducted before 25th of March 2014.
.

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்