தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

19.9.12

அனைத்துப் பள்ளிகளும் செப். 20-ல் செயல்படும்

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் வியாழக்கிழமை (செப். 20) வழக்கம் போல் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர் கட்டுப்பாடு, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு ஆகிய மத்திய அரசின் அறிவிப்புக்கு அனைத்து எதிர்கட்சிகளும் வரும் வியாழக்கிழமை (செப். 20) நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

இந் நிலையில் தமிழகத்தில் பள்ளிகளில் காலண்டுத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அன்றைய தினம் தேர்வு நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்ததது.

இதையடுத்து செப். 20 (வியாழக்கிழமை) வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என்றும் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்