தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

18.9.12

20ம் தேதி நடைபெறும் காலாண்டு தேர்வுகள் ரத்து

வரும், 20ம் தேதி, "பந்த்' நடைபெறவுள்ளதால், மாநிலம் முழுவதும், பள்ளிகளில் நடக்கும் காலாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வரும், 20ம் தேதி, தேசிய அளவில், "பந்த்' நடத்த, எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

பள்ளிகளில், காலாண்டுத் தேர்வுகள் தற்போது நடந்து வருவதால், "பந்த்' அன்று மாணவ,மாணவியர், பள்ளிகளுக்கு செல்வதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அன்று நடைபெறும் தேர்வினை, வேறு தேதியில் நடத்த ஏற்பாடு செய்யுமாறு, தமிழக அரசு அறிவித்துள்ளதால், 20ம் தேதி நடைபெறவிருந்த காலாண்டுத் தேர்வுகள், ரத்து செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்