தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

4.8.12

பள்ளிக் கல்வி இயக்குனராக தேவராஜன் நியமனம்





பள்ளிக்கல்வி இயக்குனராக தேவராஜன், நேற்று நியமிக்கப் பட்டார்.


ஈரோடு மாவட்டம், குமலன்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான தேவராஜன், எம்.ஏ., - எம்.எட்., பட்டதாரி. 1995ல், போட்டித் தேர்வு மூலம் மாவட்டக் கல்வி அதிகாரியாக தேர்வு பெற்று, பின் முதன்மைக் கல்வி அலுவலராக, பல மாவட்டங்களில் பணியாற்றினார்.

இணை இயக்குனர் பதவி உயர்வு பெற்று, தேர்வுத்துறை, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், இயக்குனர் பதவி உயர்வுக்குப் பின், தொடக்கக் கல்வி இயக்குனர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் ஆகிய பதவிகளுக்குப் பின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனராக பணிபுரிந்து வந்தார். தற்போது பள்ளிக்கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வரும் 6ம் தேதி, புதிய பொறுப்பை ஏற்கிறார். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், புதிய பாடத் திட்டங்களை மெருகேற்றியது; முப்பருவ கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு திட்டங்கள் குறித்து பயிற்சி கையேடுகளை தயாரித்து, மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தது உள்ளிட்ட பல்வேறு பணிகளை, தேவராஜன் சிறப்பாக செய்து முடித்தவர்.

கல்வியில் பின் தங்கியுள்ள வட மாவட்டங்களை முன்னேற்றுவது; ஒட்டுமொத்த கல்வித்தரத்தை உயர்த்துவது; பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, தரமான, புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவது போன்றவை, புதிய இயக்குனர் முன் வைக்கப்பட்டுள்ள சவால்கள்.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்