தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

14.6.12

கிரிமிலேயர் உச்சவரம்பு அதிகரிக்கிறது?

மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட இ‌னத்தை சேர்ந்தவர்கள் இடம்பெறுவதற்கான ஆண்டு வருமானம் 4.5லட்சத்திலிருந்து 6 லட்சமாக அதிகரிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1993-ம் ஆண்டு மத்திய அரசின் கல்வி நிறுவனம் மற்றும் வேலைவாயப்புகளில் ஓ.பி.சி., பிரிவினர் சேருவதற்கு கிரிமிலேயர் முறை கொண்டுவரப்பட்டது. அப்போது ஆண்டு வருமானம் ஒரு லட்சமாக நிர்ணயிக்‌கப்பட்டது. பின்னர் 2004-ம் ஆண்டு இவை 2.5 லட்சமாகவும், ‌தொடர்ந்து 2008-ல் 4.5 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிலவிய விலை குறியீட்டு எண் அடிப்படையில் தற்போது ஆறு லட்சமாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்