தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

10.6.12

பள்ளிகளில் பணிநிரவல்: ஆசிரியர்களுக்கு சிக்கல்

உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங் நடத்துவதற்கு முன், பணிநிரவல் மூலம் சில காலியிடங்களை நிரப்ப, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் கவுன்சிலிங் விரைவில் துவங்க உள்ளது. இதற்கு முன் காலிப் பணியிடங்களை, பணிநிரவல் முறையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர் / மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களில், ஒரே பாடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளிகளில், குறிப்பிட்ட பாடங்களுக்கு ஆசிரியர் இல்லை.

உதாரணமாக, ஒரு பள்ளியில் வரலாறு பாடம் நடத்த இரண்டு ஆசிரியர்கள் இருந்தால், அதில் ஒருவர், வரலாறு ஆசிரியர் இல்லாத பள்ளிக்கு மாறுதல் செய்யப்படுவார். இதுபோல பணிநிரவல் செய்த பின், காலியாக உள்ள இடங்களுக்கு மட்டுமே மாறுதல் கவுன்சிலிங் நடக்கும்.

பணிநிரவல் அடிப்படையில் தான், காலிப் பணியிடங்கள் வெளியிடப்படும்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்