தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

4.4.12

ஜாதி வாரி கணக்கெடுப்பு - ஒவ்வொரு நாளும் 15 வீடுகள் மட்டுமே கணக்கெடுப்பு

இந்திய அளவில் சமூக பொருளாதார மற்றும் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு பணிகள் பிற மாநிலங்களில் நடந்துவருகிறது. தமிழகத்தில் இப்பணி ஏப்., 20 ல் துவங்குகிறது.

கணக்கெடுப்பில், நகரம், கிராம அளவில் பெயர், முகவரி, தொழில், படிப்பு, சொந்த வீடா, வாடகையா, சொத்து உள்ளதா, வேலைவாய்ப்பு என்ன, ஜாதி, மதம் உட்பட பல தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளது.

கள பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் 15 வீடுகளை மட்டுமே கணக்கெடுத்து அதன் விபரங்களை அன்றைய தினமே ஆன் லைனில் பதிய வேண்டும். இத்திட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் அவர்களிடம் 2 நிமிடம் விவரிக்கவேண்டும்.

களப்பணியாளர்கள் சரியாக கணக்கெடுப்பு நடத்துகிறார்களாக என்பதை கண்காணிக்க, மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த கணக்கெடுப்பு ஒன்றரை மாதம் நடக்கிறது.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்