தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

4.3.12

பள்ளிகளுக்கு ஜெனரேட்டர் - கண்காணிக்க குழு அமைப்பு

12 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு தேர்வு நடக்கும் காலத்தில் பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்கள் வழங்கப்படுவதை கண்காணிக்க அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தற்போது உள்ள இக்கட்டான சூழ்நிலையில் மின் நிலைமைகளை சமாளிக்கும் வகையிலும், தொழில் துறையினர் மற்றும் நுகர்வோர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலும், தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்படுத்த உள்ள மின் விநியோக கட்டுப்பாட்டு முறைகளை 25.2.2010 அன்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தால் செயல்படுத்த உள்ள இந்த மின்வெட்டு காரணமாக பொதுத்தேர்வு எழுதவுள்ள 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதால் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எனினும், அவ்வாறு இயலாத சூழ்நிலையில் மின்வெட்டு உள்ள நேரங்களிலும் தொடர்ந்து மின்சாரம் கிடைக்கும் வகையில் அரசே ஜெனரேட்டர்களை வாடகைக்கு பெற்று வழங்கும், ஜெனரேட்டர்களை இயக்குவதற்கான டீசல் உள்பட அனைத்து செலவையும் அரசே ஏற்கும். இதேபோன்று அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகள், ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து இயக்கிக்கொள்ளலாம். அதற்கு ஏற்படும் கூடுதல் செலவினை அரசு அவர்களுக்கு ஈடு செய்யும்.

பள்ளி கல்வி இயக்குனரகம் மற்றும் தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோக கழகத்தின் இயக்குனர் (விநியோகம்) ஆகியோர் அனுப்பிய திட்டங்கள் பரிசீலித்து அரசு சில உத்தரவுகளையும் வழிமுறைகளையும், முதல்வரின் உத்தரவுக்கு இணங்க அமல்படுத்துவதற்கு முன்வந்துள்ளது.

1. ஒவ்வொரு அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பள்ளி குழந்தைகளின் தேர்வுக்கு எந்தவொரு தடங்கலும் வராத வகையில் ஜெனரேட்டர் வழங்குவதை உறுதி செய்தவதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக மாவட்ட கலெக்டர் இருப்பார். உறுப்பினராக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல் பொறியாளர், உறுப்பினர் செயலாளராக பள்ளிக்கல்வித்துறையின் தலைமை கல்வி அதிகாரி, மற்றொரு உறுப்பினராக பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர்(கட்டிடங்கள்) ஆகியோர் இந்த குழுவில் இடம் பெறுவார்கள்.

12ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 8ம் தேதி தொடங்கி 30ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 4ம் தேதி தொடங்கி ஏப்ரல் 23ம் தேதியும் முடிவடைவதால் மார்ச் மற்றும் ஏப்ரல் காலங்களில் உயர் நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட வேண்டும்.

தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோக இயக்குனர் கொடுத்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுப்பதற்கு உள்ள செலவினங்களை மாவட்ட குழு அங்கீகரிக்க வேண்டும். அதற்கும் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிகளிலும் மின் தேவையை அடைவதற்கு 5 கே.வி.ஏ. திறனுக்கு மேம்பட்ட ஜெனரேட்டர்களை வாங்க கூடாது.

2. ஒவ்வொரு அரசு பள்ளிகளும் மாதம் ஒன்றுக்கு 40 ஆயிரத்து 200 ரூபாய்க்கு மேல் மின் செலவு ஏற்படுத்தக் கூடாது. அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இந்த தொகையின் 3-ல் 2 பகுதி தொகை (26 ஆயிரத்து 800 ரூபாய்) என்ற அளவை தாண்டக் கூடாது. ஜெனரேட்டர்களை எடுத்துச் செல்வது அவற்றை கையாளுவதற்கான உணவு செலவு, கேபிள்கள், வயர்கள் போன்ற மின் உபகரணங்கள் பொருத்துவது, எரிபொருள் செலவு போன்றவை இந்த அனுமதிக்கப்பட்ட 40 ஆயிரத்து 200 தொகைக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தமிழ்நாடு மின்சாரம் வாரியம் அளிக்கும் மின்சாரம் தடை செய்யப்பட்ட நேரத்தில் மட்டும் தான் பள்ளி நிர்வாகிகள் ஜெனரேட்டர்களை பயன்படுத்த வேண்டும். மின்தடை நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகளுக்கு ஆகும் வாடகை தொகையை மாவட்ட அளவிலான குழு அங்கீகரிக்கும். அரசு பள்ளிகளை பொருத்தவரையில் ஆரம்ப கட்ட செலவு பி.டி.ஏ. நிதி, சிறப்பு கட்டணம், மாவட்ட பொது தேர்வு நிதி ஆகியவை மூலம் செலவு எதிர்கொள்ளப்படும்.

அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை பொருத்தவரையில் ஜெனரேட்டர்களை வெளியில் இருந்து அவர்கள் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். விதிமுறைகளுக்கு உட்பட்ட சலுகையினம் அரசால் திருப்பி கொடுக்கப்படும். அனைத்து பள்ளிகளுக்காகும் செலவை, பள்ளி கல்வி இயக்குனரின் அனுமதியின் படி தனியாக பெற்றுக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி:
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்