தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

17.3.12

தனிநபர் வருவாயும் வரி விலக்கும்

 
  • ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய் வரையில் வருமான வரி இல்லை. 2 லட்சத்திற்கு மேல் 5 லட்சம் ரூபாய் வரை இருந்தால் 10 சதவீதமும், 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில், 20 சதவீதமும், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. 
  • இந்த புதிய வரி விதிப்பு மூலம் வரிசெலுத்தும் ஒவ்வொரு குடிமகனும், ஆண்டுக்கு தங்களது வருமானத்தில், 2 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. 
  • ராஜிவ்காந்தி பெயரில் ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இதன்படி, 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள ஒருவர், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கி அவற்றை மூன்று ஆண்டுகளுக்கு விற்பனை செய்யாமல் வைத்திருந்தால் அதற்கு 50 சதவீத வரிவிலக்கு அளிக்கப்படும். 
  • ஆண்டொன்றுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ள ஒருவர் வங்கியில் சேமிப்பு கணக்கில் போட்டு வைத்திருக்கும் பணத்திற்கு வட்டியாக 10 ஆயிரம் ரூபாய் வரையிலான வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்படும். 
  •  ரத்தச் சோதனை உள்ளிட்ட நோய் கண்டறியும் சோதனைகளை மேற்கொண்டால் அதற்கான செலவு தொகையில், 5 ஆயிரம் ரூபாய் வரை வரிவிலக்கு அளிக்கப்படும். 
  •  வெளிநாட்டில் சொத்துக்கள் வைத்திருந்தால், அதுபற்றி வருமான வரி கணக்குகளில் தகவல் தெரிவித்தே ஆக வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அந்த சொத்து வாங்கியதில் இருந்து 16 ஆண்டுகள் வரை, அந்த சொத்துக்களைப் பற்றி விசாரணை நடத்துவதற்கு வருமான வரித்துறையினருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 
  •  இரண்டு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நகை வாங்கினால், அவற்றுக்கு உடனடியாக அங்கேயே வரி செலுத்தியாக வேண்டும்.
 நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்