தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

10.3.12

வருமான வரி விலக்கு - சபாநாயகரிடம் பார்லி. நிலைக் குழு அறிக்கை அளித்தது

வருமான வரி விலக்கு வரம்பை 1 லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து 3 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும் என யஷ்வந்த்சின்கா தலைமையிலான பார்லிமென்ட் நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.

வரும் பட்ஜெட்டில் அறிமுகமாக உள்ள நேரடி வரி திட்டத்தை ஆய்வு செய்த இக்குழு, அதன் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை, பார்லிமென்ட் சபாநாயகர் மீரா குமாரிடம் நேற்று அளித்தது.

இந்த அறிக்கையில், 
  • வருமான வரி விலக்கு வரம்பை 3 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும், 
  • வரி சேமிப்பு திட்டங்களுக்கான முதலீட்டு வரம்பை 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும்,
  • செல்வ வரி வரம்பை 5 லட்ச ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும், 
  • பங்கு பரிவர்த்தனை வரியை நீக்க வேண்டும்,
என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்