தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

4.3.12

வருமான வரி விலக்கு வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த பரிசீலனை

வருமான வரி விலக்கு வரம்பை, 3 லட்சமாக உயர்த்த பார்லிமென்ட் குழு பரிந்துரை செய்துள்ளது.

பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 12ம்தேதி துவங்குகிறது. 16ம்தேதி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பொது பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்நிலையில், நேர்முக வரிகள் குறியீட்டு மசோதா குறித்து ஆய்வு செய்து வரும், பார்லிமென்ட் நிலைக்குழுவின் கூட்டம் நேற்று நடந்தது.இந்த கூட்டத்தில், வருமான வரி விலக்கு வரம்பை, 3 லட்ச ரூபாயாக உயர்த்தவும், 2.5 லட்ச ரூபாய் வரையிலான சேமிப்புக்கு வரித்தள்ளுபடி அளிக்கும்படி, பரிந்துரை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


வருமான வரி விலக்கு வரம்பு, தற்போது 1.8 லட்சமாக உள்ளது. இதை, 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என, குழுவில் உள்ள சில உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதை ஏற்க மறுத்த குழு, வருமான வரி விலக்கு வரம்பை, 3 லட்சமாக உயர்த்த ஒப்புக் கொண்டுள்ளது.இதற்கேற்ற வகையில், 1961ம் ஆண்டுக்கான வருமான வரி சட்டத்தில் மாற்றம் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.


நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்