தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

7.3.12

ஜூன் 3ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு: 22ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்

கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, தமிழகத்தில், முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு, ஜூன் 3ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள், 22ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.

* கடந்த 2010, ஆக., 23ம் தேதிக்குப் பின், அரசு, அரசு நிதியுதவி, தனியார் என எந்தப் பள்ளிகளில் பணியில் சேர்ந்தவரானாலும், ஆசிரியர் தகுதித் தேர்வை கண்டிப்பாக எழுதி, தேர்ச்சி பெற வேண்டும்.

* ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, ஆசிரியர் வேலைக்கு வர வேண்டும் என விரும்புபவர்களில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் என, இரு வகையினரும் இத்தேர்வை எழுத வேண்டும்.

* இடைநிலை ஆசிரியர் பணிக்கு வருபவர்கள், முதல் தாள் தேர்வையும்; பட்டதாரி ஆசிரியர் பணியில் இருப்பவர்கள் மற்றும் இந்தப் பணிக்கு வர விரும்புபவர்கள், இரண்டாம் தாள் தேர்வையும் எழுத வேண்டும்.

* இடைநிலை மற்றும் பட்டதாரி என, இரு வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் இரு வகுப்புகளுக்கும் சேர்த்து பணி செய்ய விரும்புபவர்கள், இரு தேர்வுகளையும் எழுத வேண்டும்.

* கேள்விகள், தமிழ் மற்றும் ஆங்கில வழியில், "அப்ஜக்டிவ்' முறையில் இருக்கும். தலா, 150 மதிப்பெண்களுக்கான தேர்வில், தேர்ச்சி பெற, 60 சதவீத மதிப்பெண்கள் (90) பெற வேண்டும்.

* விண்ணப்பம் விலை, 50 ரூபாய்; தேர்வுக் கட்டணம், 500 ரூபாய். இரு தாள் தேர்வுகளை சேர்த்து எழுதவும், 500 ரூபாய் கட்டணமே போதுமானது.

* ஏப்., 4ம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களிலேயே சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் 3ம் தேதி, தகுதித் தேர்வு நடைபெறும்.

* ஆறு லட்சம் பேர் தேர்வு எழுதுவர் என, ஆசிரியர் தேர்வு வாரியம் எதிர்பார்க்கிறது. எனினும், ஏழு லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்