தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

13.3.12

ஆசிரியர் தேர்வு பாடத் திட்டம் 22ம் தேதிக்குள் வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்கள், 22ம் தேதிக்குள் வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணி புரிவோர் மற்றும் வேலைக்காக எதிர்பார்த்து காத்திருப்பவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரு வகை தேர்வுகளாக, ஜூன் 3ம் தேதி நடைபெறும் நிலையில், இதற்கான விண்ணப்பங்கள், 22ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. எனினும், தேர்வுக்கான பாடத்திட்டங்கள், இன்னும் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறும்போது, ""பாட வாரியாக, பாடத் திட்டங்களை தயாரித்து, அரசுக்கு அனுப்பி, ஒப்புதலையும் பெற்று விட்டோம். ஆனால், அவை இன்னும் அரசின், "கெஜட்டில்' வெளியாகவில்லை. விண்ணப்பங்களை வழங்குவதற்குள் இணையதளத்தில் பாடத் திட்டங்கள் வெளியிடப்படும்,'' என்றனர்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்