தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

26.2.12

காணாமல் போன ஊழியரின் மகளுக்கு கருணை அடிப்படையில் பணி: மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு

மனநிலை சரியில்லாமல் காணாமல் போன மாநகராட்சி ஊழியரின் மகளுக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்க மறுத்ததை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. கருணை அடிப்படையில் பணி வழங்கவும், மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. 

சென்னை மாநகராட்சியின் லாரி டிப்போவில் கிளீனராக நாராயணன் என்பவர் பணியாற்றினார். பணியில் இருக்கும் போது விபத்து ஏற்பட்டதால், நாராயணனுக்கு மனநிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறும் போதே, அங்கிருந்து மாயமாகி விட்டார். நாராயணனின் மனைவி, ஓட்டேரி போலீசில் புகார் கொடுத்தார். அவர் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை என்று, 13 ஆண்டுகளுக்குப் பின், போலீசார் சான்றிதழ் வழங்கினர். 13 ஆண்டுகளாக எங்கு இருக்கிறார் என தெரியாததால், அவர் இறந்துவிட்டதாக கருதி, முன்சிப் கோர்ட்டும் 2000ம் ஆண்டு உத்தரவிட்டது. 

கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரி, நாராயணனின் மகள் பத்மாவதி, மாநகராட்சிக்கு மனு அனுப்பினார். "காணாமல் போனவரின் வாரிசுக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்க முடியாது' என, மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முன்சிப் கோர்ட் வழங்கிய உத்தரவை இணைத்து, மீண்டும் மனு அனுப்பினார். இதை பரிசீலித்த மாநகராட்சி, பத்மாவதிக்கு திருமணமாகி விட்டதால், கருணை அடிப்படையில் வேலை வழங்க பரிசீலிக்க முடியாது என கூறியது. 

இதையடுத்து, ஐகோர்ட்டில் பத்மாவதி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: முதலில் விண்ணப்பம் அளிக்கும் போது, எனக்கு 18 வயது. அப்போது, எனக்கு திருமணம் ஆகவில்லை. பணி நியமனங்களுக்கு தடை இருந்ததால், எனது விண்ணப்பம் அப்போது பரிசீலிக்கப்படவில்லை. மாமாவை திருமணம் செய்து கொண்டேன். திருமணத்தை காரணம் காட்டி, எனது விண்ணப்பத்தை நிராகரிக்கக் கூடாது. எனக்கு பணி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இம்மனுவை நீதிபதி சிவஞானம் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் பி.சாலமன் ஆஜரானார். 

நீதிபதி சிவஞானம் பிறப்பித்த உத்தரவு
இதுபோன்ற ஒரு வழக்கில், ஐகோர்ட் 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது. எனவே, மாநகராட்சியின் உத்தரவை ஏற்க முடியாது. அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரை பரிசீலித்து, கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். தேவைப்பட்டால், வயது தகுதியை தளர்த்தலாம். மாநகராட்சியின் இந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 

இவ்வாறு நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டுள்ளார்.
 
நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்