தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

21.2.12

ஏப்ரலில் மீண்டும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு:தேர்வுத்துறை அறிவிப்பு

நேரடி எட்டாம் வகுப்பு தனித்தேர்வு, ஏப்ரலில் நடைபெறும் நிலையில், இன்று முதல், மார்ச் 2ம் தேதி வரை, விண்ணப்பிக்கலாம் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவித்துள்ளார்.

இயக்குனரின் அறிவிப்பு
  • வரும் ஏப்ரலில், நேரடி எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும். 
  • ஏப்., 1ம் தேதியன்று, 12.5 வயது பூர்த்தி அடைந்த மாணவர்கள், 21ம் தேதியில் இருந்து (இன்று), மார்ச் 2ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 
  • தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் இருந்து, விண்ணப்பங்களை பெறலாம். 
  • தேர்வுக் கட்டணமாக, 125 ரூபாயை, "டிடி'யாக செலுத்தாமல், கருவூல செலுத்துச்சீட்டு மூலமாகவே செலுத்த வேண்டும்.
விதிமுறைகள்:
  • வயது குறித்த பிறப்புச் சான்றிதழின் நகலை, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். 
  • இத்தேர்வை எழுத, குறைந்தபட்ச கல்வித்தகுதி எதுவும் தேவையில்லை. 
  • அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில், எட்டாம் வகுப்பிற்கும் கீழ் வகுப்புகளில் படித்து இடையில் நின்றவர்களும், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • ஏற்கனவே இத்தேர்வை எழுதி, சில பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு, பழைய பாடத்திட்டத்தின் கீழ், இந்த தேர்வு மற்றும் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடக்கும் தேர்வு ஆகிய, இரு தேர்வுகளுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்படும். அதன்பின், 2014 ஏப்ரலில் நடக்கும் தேர்வை, புதிய பாடத் திட்டத்தின் கீழ், அனைத்து தேர்வுகளையும் எழுத வேண்டும்.
  • புதிய தேர்வர்கள், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் தேர்வை எழுத வேண்டும்.
  • தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, உருது ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறும். 
  • மொழிப் பாடத்தை தவிர, மற்ற பாடங்களின் விடைகளை, தமிழ், ஆங்கிலம் மற்றும் உருது ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே அளிக்க வேண்டும்.
இவ்வாறு வசுந்தரா கூறியுள்ளார்.

அரசாணை (நிலை) எண்: 36 பள்ளிக்கல்வி(வி1) துறை நாள்: 17-02-2012

நன்றி:



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்