தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

15.2.12

எட்டாம் வகுப்புத் தேர்வை மீண்டும் நடத்த உத்தரவு: படிப்பை பாதியில் விட்டவர்களுக்கு மட்டும் அனுமதி

ரத்து செய்யப்பட்ட நேரடி எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை, மீண்டும் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தேர்வில், மாணவர்கள் கலந்துகொள்ள முடியாது; படிப்பை பாதியில் விட்டவர்கள் மற்றும் வயது அதிகமானவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
 
முதலில் ரத்து: பள்ளிகளில் சேர்ந்து படிக்க முடியாதவர்கள் மற்றும் படிப்பை பாதியில் விட்டவர்கள், வீட்டில் இருந்தபடியே படித்து, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் வசதி, பல ஆண்டுகளாக தேர்வுத்துறையில் இருந்து வந்தது.இந்நிலையில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில், 'எட்டாம் வகுப்பு வரை, அனைவரையும் தேர்ச்சி செய்ய வேண்டும்' என இருக்கிறது. இப்படி இருக்கையில், நேரடி தனித்தேர்வை நடத்தி, தேர்ச்சி, தோல்வியை வெளியிடுவது சரியாக இருக்காது என்பதால், கடந்த 2010ம் ஆண்டுடன், தமிழக அரசு இத்தேர்வை ரத்து செய்துவிட்டது.
 

மீண்டும் தேர்வு: சாதாரண வேலை, ஓட்டுனர் உரிமம், ரயில்வேயில் கலாசி வேலை போன்றவற்றுக்கு, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். ஆகையால், படிப்பை பாதியில் விட்டவர்கள், மீண்டும் தேர்வெழுத வசதியாக, ரத்து செய்யப்பட்ட எட்டாம் வகுப்பு நேரடி பொதுத்தேர்வை மீண்டும் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 

வழக்கமாக, 12 வயது, ஆறு மாதங்கள் நிறைவடைந்த மாணவர்கள், நேரடி எட்டாம் வகுப்புத் தேர்வை எழுதலாம். ஆனால், புதிய விதிமுறைப்படி, நேரடி தேர்வில், இனி இவர்கள் பங்கேற்க முடியாது; பள்ளிகளில் சேர்ந்து தான் படிக்க வேண்டும்.
 
பல ஆண்டுகளுக்கு முன், பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்கள் மட்டுமே, நேரடி எட்டாம் வகுப்பு தேர்வில் பங்கேற்கலாம் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. இத்தேர்வு, வரும் டிசம்பரில் இருந்து மீண்டும் நடக்கும். 


அனைவரும், 'பாஸ்!': கட்டாயக் கல்வி சட்டம் அமலுக்கு வந்தபின், 2010ல் நடந்த, நேரடி எட்டாம் வகுப்பு தனித்தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றதாக, சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோல், இனி நடக்கும் தேர்வுகளிலும் பின்பற்றப்படும். எனவே, பெயரளவுக்கு மட்டுமே இத்தேர்வு நடக்கும்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்