தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

23.7.11

அரசின் உத்தரவை எதிர்பார்த்து கல்வித் துறை அதிகாரிகள் காத்திருப்பு

தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து கல்வித் துறையில் நீண்ட நாட்களாக நிலவிய குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஏற்கனவே அனைத்து மாவட்டங்களிலும் சமச்சீர் கல்வி பாட புத்தகங்களும், பழைய பாட திட்ட புத்தகங்களும் மாணவ, மாணவிகளுக்கு வழங்க தயாராக உள்ள சூழ்நிலையில் அரசின் உத்தரவை எதிர்பார்த்து கல்வித் துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

அரசின் உத்தரவை தொடர்ந்துதான் இப்புத்தகங்களை வழங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், வரும் 2ம் தேதிக்குள் புத்தகங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதால் உடனடியாக இதனை வழங்கும் பணி ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்